Show all

உரியில் பாதுகாப்பு படை - பயங்கரவாதிகள் இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை

வடக்கு காஷ்மீரில் உரியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டது.

கால்காய் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்பு படை தொடங்கியது.

குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை தொடங்கினர்.

பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.