Show all

கெஜ்ரிவால்,மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

தை முதல்நாள் தமிழர் திருநாள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்களும், மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட முக்கிய தமிழக அரசியல் கட்சியினர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பொங்கல் விழாவிற்;கு வாழ்த்துக்களைக் கூறினர்.

அந்த வரிசையில், புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கீச்சுரை மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்தப் பொங்கல்; தமிழக மற்றும் புதுச்சேரி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும் என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிரதமர் மோடியும் இது போல் கீச்சுரை மூலம் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.