Show all

நின்றபாடில்லை! காகிதப் பணத்தாள் நடவடிக்கையால் தொடரும் குளறுபடிகள் இன்னும்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரூ200 தாள்கள் அடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவை முழுமையாக மக்களிடத்தில் சேராததால் ஏடிஎம் மூலமாக அவற்றை வினியோகிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

புதிய 2000 ஆயிரம் ரூபாய் தாள்களைத் தொடர்ந்து 500 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்தன. அளவில் சின்னதாக இருந்த தாள்களை ஏடிஎம்களில் வினியோக்க, ஏடிஎம்களில் சில மாற்றங்களை வங்கிகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து மக்களிடத்தில் புதிய 500ரூபாய் தாள்கள் வந்தடைந்தன. இந்நிலையில் புதிய 200, 50, 20 உள்ளிட்ட தாள்களை நடுவண் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த புதிய 200 ரூபாய் தாள் அளவில் வேறு விதமாக உள்ளதால், அவற்றை ஏடிஎம் மூலம் வழங்காமல் வங்கிகள் காலதாமதம் செய்தன.

இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, 200ரூபாய் வினியோகிக்கப்படும் வகையில் ஏடிஎம்களை சீரமைக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதனால் 200ரூபாயின் தேக்க நிலை மாறி அனைவரிடத்திலும் அந்த தாள்கள் புழக்கத்திற்கு வரும் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் இவ்வாறு நாட்டில் உள்ள ஏடிஎம்களை அனைத்தையும் சீரமைக்க பல நூறு கோடி ரூபாய் ஆகும் என்றும், அதனாலேயே வங்கிகள் அனைத்தும் இதனை செயல்படுத்த தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை தொடர்ந்து இந்த பணியில் வங்கிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

குடிகாரனுக்கு வாழ்க்கை பட்ட பொண்டாட்டி போல, காகித பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து மக்களும், வங்கிகளும், பணத்தாள் தொடர்புடைய அனைத்து நிருவாகங்களும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றன மோடியின் ஆட்சியில்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,657

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.