Show all

மோடியின் சிந்தனையற்ற செயல்! பணமதிப்பு நீக்கம்: ராகுல்காந்தி

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றைய நாளில், ராகுல் மோடியைத் தாக்கி பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:

ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்களை செல்லாது என்று அறிவித்தது மிகப்பெரிய பேரிடர் சம்பவமாகும். மோடியின் சிந்தனையற்ற செயலால் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் அழிந்துள்ளன. இந்தியாவின் அடிப்படையே தகர்க்கப் பட்டுள்ளது.

மக்களின் பக்கத்தில் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி கீச்சுவில் கூறி உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.