Show all

மோடியை, நீங்கள் துக்ளக்கா! என்று மிகக் கடுமையாகச் சாடும் மாம்தா பானர்ஜி

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை துக்ளக் என காட்டமாக விமர்சித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என தொழில் நிறுவனங்களை மிரட்டுகிறீர்கள்; அவர்களோ மேற்கு வங்கத்தை விட்டு நாங்கள் போக முடியாது என அடம் பிடிக்கிறார். ஏனெனில் அவர்களது தொழில் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்துக்கான தொழில்துறை திட்டங்களுக்கு ஏன் ஒப்புதல் தராமல் இருக்கிறீர்கள்? கருப்பு பண ஒழிப்புக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல. இப்படியான ஒரு முடிவு எடுக்கப்படுவதை இந்த நாட்டின் நிதி அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை.

நீங்கள் என்ன துக்ளக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார்கள். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான் காஷ்மீரில் பயங்கரவாதம் 12விழுக்காடு அதிகரித்துள்ளது.

மோடியை இன்று விமர்சிக்க முடிவதில்லை. அப்படி விமர்சித்தால் உடனே அவரது அமைச்சரவை சகாக்கள் பேசியில் அழைத்து ஏன் அப்படி விமர்சனம் செய்தீர்கள்? என்கிறார்கள். அதற்கு, இது என்னுடைய அரசியல் உரிமை. நான் என்ன விமர்சனத்தை முன்வைக்கிறேனோ அதுதான் சரியானது என அவர்களுக்கு பதிலும் தந்துள்ளேன்.

நான் எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக அரசியல் செய்கிற நபர் இல்லை. அரசியல் பழிவாங்குதல் என்பது என்னிடத்தில் இருந்ததும் இல்லை.

மேற்கு வங்கம் என்பது விவேகான்ந்தர் மற்றும் ரவீந்தரநாத் தாகூரின் மண். இங்கே பாஜக நிலைபெற முடியாது.

குஜராத்தில் 47 துறைமுகங்கள் உள்ளன. ஆனால் மேற்கு வங்கத்திலோ 2 துறைமுகங்கள்தான் உள்ளன. இந்தியாவில் இப்போது கூட்டாட்சி நடைபெறவில்லை.

சூப்பர் எமர்ஜென்சிதான் நாட்டில் அமலாகியுள்ளது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.