Show all

நேற்றளித்தது போர்க்கப்பல் இலங்கைக்கு! காங்கிரஸ் போலவே பாஜகவும் தொடர்ந்தளிக்கும் இராணுவ உதவிகள்

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கைக்கு நீண்ட நெடுங்காலமாக ஆயுதங்களையும். இராணுவப் பயிற்சிகளையும், காங்கிரஸ் அரசும், பாஜகவும் தொடர்ந்து வழங்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது போர்க் கப்பல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைக்கான போர்க்கப்பல்கள் கட்டும் பணிகள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்று வந்தன. இதில் முதலாவது ஆழ்கடல் ரோந்து போர்க் கப்பல் கடந்த ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 2-வது போர்க் கப்பல் நேற்று இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த போர்க் கப்பல் கையளிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் சித்ராங்கனி வகீஸ்வரா, இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,736.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.