சரக்கு மற்றும் சேவை வரி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர் கூறும் போது மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், சரக்கு மற்றும் சேவை வரியின் செய்தி தொடர்பாளராக மாறிவிட்டர் என்றும் வரும் 13 அன்று நடைபெற உள்ள முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.