செல்பி எடுங்க... சில நொடிகளில் மியூச்சுவல் பண்டில் முதலீடு
செய்யுங்க..! இளைஞர்களைக் கவரும் வகையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்
நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களுடைய செல்பி புகைப்படத்துடன் ஒரு சில நொடிகளில்
ஆன்லைன் மூலம் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் வகையில் குவாண்டம் மியூச்சுவல்
பண்ட் எனும் நிறுவனம் தொடங்கியுள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையிலும், மியூச்சுவல் பண்ட் சந்தையை விரிவு
படுத்தும் வகையிலும் பல நடவடிக்கைகளை முன்னணி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இந்த
நிலையில் குவாண்டம் மியூச்சுவல் பண்ட் எனும் நிறுவனம் முதலீட்டாளர்கள் தங்களைப் பற்றிய
தகவல்களை பூர்த்தி செய்து, செல்பி புகைப்படத்தை அனுப்பி கேஒய்சி நடைமுறையை முடித்து
முதலீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழிமுறையை மற்ற மியூச்சுவல் பண்ட்களும்
பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.