உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தலில்,
பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகத்தின்
உச்சிக்கே சென்று கொண்டாடியுள்ளனர். இதன் உச்சம்தான், பா.ஜ.க தொண்டர்கள் கட்சியின்
கொடியைப் பள்ளிக்கூடத்தில் ஏற்றுமளவுக்குக் கொண்டுபோயுள்ளது. பீகார்
மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்கள் சிலர், கடந்த 18-ம் தேதி, அராரியா மாவட்டம்
போர்பஸ்கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்துக்குள் புகுந்து, பா.ஜ.க கொடியை ஏற்றி,
உத்தரப்பிரதேசத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடி உள்ளனர். பா.ஜ.க.வினரின் இந்தச் செயல்பாடு,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை
ஆசிரியர் கூறியுள்ளார். இதற்கிடையே
நடந்த சம்பவத்துக்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பப்பன் சிங், உற்சாக மிகுதியில் தங்கள்
தொண்டர்கள் சிலர் இவ்வாறு நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.