Show all

வருகை குடிஅரசு தலைவர்! நீட்டுக்காக பாகிஸ்தான் எல்லைக்கும், சீன எல்லைக்கும் நம் மாணவர்கள்

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக மாணவர்கள், நீட் தேர்வுக்காக பாகிஸ்தான் எல்லைக்கும், சீன எல்லைக்கும் பயணப்பட அலைகழித்துக் கொண்டிருக்கும் நடுவண் அரசு மீது கோபம் தான் பொங்கி வருகிறதேயொழிய தமிழ்நாட்டுக்கு இந்தியக் குடியரசு தலைவர் வருகிறாராம். வந்து விட்டுப் போகட்டுமே! வெள்ளைக்கார துரைமார்கள் இப்படித்தான் இந்தியாவில் மக்கள் நிலையைப் பற்றி கவலைப் படாமல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து போவர்கள். அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. 

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தெனாவெட்டாக இராணுவக் கண்காட்சிக்கு வந்து போனார் மோடி. இன்று தமிழக மாணவர்களை,   பாகிஸ்தான் எல்லைக்கும், சீன எல்லைக்கும் தேவையில்லாத சட்டாம்பிள்ளைத் தேர்வுக்கு, பயணப்பட அலைகழித்துக் கொண்டிருக்கிறோமே என்கிற கூச்சமே இல்லாமல் வருகிறார் குடிஅரசு தலைவர். அன்றைக்கு ஆங்கிலேயர் மெக்காலே கல்வியால் நம்மைக் கூலிக்காரன் ஆக்கினார்கள். இன்று இவர்கள் நீட்; தேர்வால் நம் கல்வி உரிமையை மறுக்கிறார்கள். வந்து விட்டு போகட்டுமே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,777.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.