Show all

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு நாட்டுப்பண் ஒலிபரப்ப வழக்கு

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிடுவதற்கு முன் நாட்டுப்பண் ஒலிபரப்ப வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த 30ந் தேதி உத்தரவிட்டது. இந்த அமர்வு முன் பா.ஜனதா தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி குமார் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு நாட்டுப்பண் ஒலிபரப்ப உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் இருவரும், இந்த மனுவை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை எனக்கூறினர். மேலும் இது தொடர்பாக தகுந்த மனுவை தாக்கல் செய்யுமாறும் மனுதாரரை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.