Show all

ஆதார் தலைவலி ஓய்ந்தபாடில்லையா

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெகிழி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்டைகள் மட்டுமே செல்லும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

நெகிழி அட்டை குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.50, ரூ.300 அல்லது அதற்கு மேல் பணத்தை வசூல் செய்து கொள்ளும் சில ஆதார் கார்டு நிறுவனங்கள் அவற்றை நெகிழி அட்டைகளில் அச்சடித்து கொடுக்கின்றன. இதுபோன்று நமது விவரங்களை அச்சிட்டு ஆதார் கார்டு என்று கூறும் இந்த கார்டு தேவையில்லாத ஒன்றாகும். அரசால் வழங்கப்படும் ஆதார் அட்டையோ அல்லது பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்;டைகள் மட்டுமே செல்லுபடியாகும். தாளில் செய்யப்படும் ஆதார் அட்டை வைத்திருப்போர் ஆதார் அட்டையை நெகிழியில் அச்சடிக்கவோ தேவையில்லை.

இதுபோன்று ஒரு நடைமுறையை அரசு கடைபிடிக்கவில்லை. ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே கடைகளில் சென்று ஆதார் அட்டை பெற்றுக் கொள்வதை தவிருங்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,690

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.