Show all

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானதுல்லா கான் மீது பாலியல் தொல்லை புகார்

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரான அமானதுல்லா கான் மீது அவரது தம்பி மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜாமியா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் ஜாமியா நகர் காவல் நிலையத்துக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் தான் சரணடைவதாக கூறினார். ஆனால் அப்போது அவரைக் கைது செய்ய மறுத்த காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இந்த வழக்கு தொடர்பாக அமனாதுல்லா கான் சட்டமன்ற உறுப்பினர் நேற்று சரிதா விகாரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்ததும், காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்தத் தகவலை தனது சுட்டுரை தளத்தில் வெளியிட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அமானதுல்லா கான், தன்னைக் கைது செய்யும்படி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லி அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.