Show all

படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பக்கம் கூகுள் தேடலில் முதன்மை! மறுபக்கம் வழக்கு! சந்திப்பவர் பிரியா வாரியர்

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலையாள நடிகை பிரியா வாரியர் தனது காதல் வெளிப்படுத்தும் விழியழகால் நாடுமுழுவதும் இரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், கூகுள் தேடலிலும் முதன்மை பெற்றிருக்கிறார்.

அவர் நடித்த ‘ஒரு அடார் லவ் மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பிரபலமடைந்துள்ளது. காதலை எதிர்க்கும் மோடியே, ‘மாணிக்ய மலராய பூவி என்ற பாடலைப் பாருங்கள் ஜிக்னேஷ் மோவானி கீச்சுப் பதிவிடும் அளவிற்கு வட மண்ணிலும் கூட பிரபலம்.

மாணிக்ய மலராய பூவி பாடலை மலையாள நடிகரும் பாடகருமான வினித் சீனிவாசன் பாடியுள்ளார். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன் ஆவார். உமர் லூலு இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம்தான் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே பிரியா வாரியரின் கண்சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து ஐதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இந்த பாடலில் வரும் ‘புனித நகராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாம். எனவே நடிகை பிரியா வாரியர், பாடல் ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து ஐதராபாத்தில் காவல்துறையினர் வழக்குபதிவும் செய்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,698

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.