Show all

விக்ரம் மகன் துருவ் கதைத்தலைவனாக நடிக்கும் வர்மா கார்த்திகையில் வெளியாகிறது

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விக்ரம் மகன் துருவ் கதைத்தலைவனாக நடிக்கும் படம் வர்மா. இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்குகிறார். துருவ்வோடு இந்தப் படத்தில் கதைத்தலைவியாக வங்காளத்தை சேர்ந்த மேகா சௌத்ரி நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ளன.

இந்தப் படத்தின் பாடல்களை வருகிற சனிக்கிழமையன்று வேலூரில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கு அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்திற்கு இசை அமைத்த ரதனே இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வர்மா கார்த்திகை மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,914.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.