Show all

பா.ரஞ்சித்துக்கு இரண்டு படங்கள்! இயக்குநராகக் கொண்டு ஒரு படமும், தயாரிப்பளாராகக் கொண்டு ஒரு படமும் உருவாகின்றன

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' படம் 50 நாட்களை கடந்து சில திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றது. சுமாரான வெற்றி படமாக அமைந்த இந்தப் படத்தை தொடர்ந்து ரஞ்சித் உருவாக்க உள்ள படம் குதிரை வால்.

இந்தப் படத்தை நீலம் புரடக்ஷன் தயாரிக்கிறது. இதில் மொத்தம் 5 கதைகளை உள்ளடக்கியதாகவும், அதில் ஒரு கதையை பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்தை தயாரிக்கிறார். இதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.