Show all

தமிழ்ப்படம் 2.0 பார்த்த தயாரிப்பாளரே சோகத்திலாம்! தமிழ்ப்படம் 2.0 க்கான விளம்பரக்காட்சியிலும் தொணிக்கும் கேலி

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்படம் 2.0. இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் எல்லா தமிழ் திரைப்படங்களின் காட்சியை கேலி செய்து படமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இரண்டாம் பாகத்தில் பிரபலமான தமிழ் படங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி, விவேகம், மெர்சல், மங்காத்தா, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் பாகத்தில் படங்களை கடந்து தமிழக அரசியல்வாதிகளையும், உலக அரசியல் தலைவர்களையும் கேலி செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் சி.எஸ். அமுதன் அண்;மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சி.எஸ் அமுதன் தனது கீச்சு பக்கத்தில் படத்தை தயாரிப்பாளர் பார்த்துவிட்டதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், படத்தின் தயாரிப்பாளர் தலை மீது கைவைத்து சோகமாக இருக்கிறார். இந்தப் புகைப்படம் படத்தின் பிரபலத்திற்காக வெளியிடப்பட்டது என கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.