Show all

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது! கமல் வரட்டும் பார்க்கலாம்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி வேலை கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு தண்டனையாக பொன்னம்பலம் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக வெளியான முன்னோட்டக் காணொளியில் 'இன்னைக்கு பிக்பாஸ் பார்க்க வாங்கன்னு சொல்றது சம்பளம் வாங்கின கடமை. ஆனால், அதுக்கும் மேல எனக்கு ஒரு கடமை இருக்கு. அத நான் இன்னைக்கு செய்யப்போறேன். நீங்க வேடிக்கை பாருங்க. நான் வேலைய பாக்குறேன்' என கோபமாக பேசுகிறார் கமல்.

எனவே, கமல்ஹாசன் ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார்? எல்லாம் நடிப்புத்தான் வீராங்காவா? இல்லை சிறப்பாக ஏதாவது இருக்குமா? என்கிற தேடுதல் பிக்பாஸ் பார்வையாளர்களை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கொக்கி போட்டு இழுப்பதாய் இருக்கிறது. 

மேலும் சர்வாதிகாரி ஐசுவர்யா, மிகவும் நொந்து போன தாடி பாலாஜி, பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் அதே தாடி பாலாஜி, சர்வாதிகாரி வேலையை முடித்து வைத்த பொன்னம்பலம், சர்வாதிகாரி வேலையின் முடிவு பிக்பாஸ் எதிர்பார்த்ததா பிக்பாசே எதிர்பார்க்காத திருப்பமா? இதையெல்லாம் கமல் சப்பை கட்டுவாரா? இல்லை சிறப்பான சிகிச்சை தருவாரா? என்கிற எதர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. கமல் வரட்டும் பார்க்கலாம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.