Show all

சென்னை மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்.

தொடர் கன மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததால் செய்வதறியாது தவிக்கும் சென்னை மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்.

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். ‘பாகுபலி’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரபாஸ் ரூ.15 லட்சமும், மகேஷ்பாபு ரூ.10 லட்சமும், ரவிதேஜா ரூ.5 லட்சமும், கல்யாண்ராம் ரூ.5 லட்சமும், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சமும், வருண் தேஜா ரூ.3 லட்சமும், சம்பூர்ணேஷ் ரூ.50 ஆயிரமும், வழங்குகிறார்கள்.

மேலும், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் 50 ஆயிரம் உணவு பொட்டலங்களை அனுப்பி வைத்துள்ளார். இதுவரை மொத்தமாக  ரூ.66 லட்சத்து 50 ஆயிரத்தை தெலுங்கு திரையுலகம் திரட்டியுள்ளது.

இது தவிர, ‘நான் ஈ’ படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நடிகர் நானி, ‘பிரபல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஐதராபாத்தில் உள்ள பிரபலமான வணிக வளாகங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழக வௌ;ள நிவாரணத்துக்காக உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்ய இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் ராணா தனது டுவிட்டரில் ‘வௌ;ள நிவாரணத்துக்கு உதவ தாராளமாக காசோலைகளை ராமாநாயுடு அறக்கட்டளை என்ற பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவை சென்னைக்கு அனுப்பப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ரகுல்பிரீத் சிங்கும் வெள்ள  நிவாரணத்துக்கு உதவும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.