Show all

அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது...

அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள்.

அஜித் நடித்த வேதாளம் படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறுவை சிசிச்சை செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால்தான் நடிகர் சங்க தேர்தலில்கூட அவர் வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் உடல் நலம் குறித்து  நேற்று சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவின.  அஜித்தின் மேலாளராக பணியாற்றுபவர் சுரேஷ் சந்திரா. இவருடைய ட்விட்டர் தளத்தை மாற்றி அதில் அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் என்று வாசகத்தை வாட்ஸ்-அப் மூலமாக பரப்பினார்கள். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில், அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார் என்று தெரிவித்தார். அஜித் உடல் நலம் குறித்த இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.