Show all

இலட்சுமி அடைந்த அதிர்ச்சி கண்ணம்மா அடையவில்லை! விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா இன்றைய அத்தியாயத்தில்

கொண்டாடிகளால் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டு வந்த விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது இலட்சுமி மற்றும் ஹேமா குழந்தைகளை முன்வைத்து நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 
12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கண்ணம்மாவைப் பார்த்து ஹேமா கேட்ட அந்த ஒரு கேள்வியோடு விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடரின் நேற்றைய அத்தியாயம் முடிகிறது. 

பாரதி கண்ணம்மா தொடரில் இப்போது சிறுமிகளாக நடிக்கும் ஹேமா மற்றும் இலட்சுமியின் நடிப்பே அனைவரும் பாராட்டும்படி உள்ளது. குறிப்பாக இலட்சுமியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஹேமா இலட்சுமி என்று ஒலிக்கிற அழகே தனி. 

கண்ணம்மா தொடர் தற்போது இந்தக் குழந்தைகளை முன்வைத்து தாம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மா மறைத்து வைத்திருந்த தனது முகவரியை இலட்சுமி வெறுமனே ஆதாரை வைத்து கண்டுப்பிடித்துவிட்டார். தன்னுடைய அப்பா யார் என்கிற  உண்மை இப்போது இலட்சுமிக்கு தெரிந்து விட்டது. 


இதனிடையே கண்ணம்மாவிடம் 2வது திருமணம் பற்றி பேசி அதிர்ச்சி கொடுக்கிறார் ஹேமா. அதாவது தன் அப்பா பாரதியை 2வது திருமணம் செய்து கொள்ளும்படி கோரிக்கை வைக்கிறார். 

தன் அப்பாவுக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்தால் என்ன என்கிற கேள்வியை ஹேமா- முன்னேமே இலட்சுமியிடம் கேட்ட போது- இலட்சுமி கடும் அதிர்ச்சிக்கும் சினத்திற்கும் உள்ளானாள். ஆனால் இந்தக் கோரிக்கை கண்ணம்மாவுக்குப் பெரிதாக அதிர்ச்சி தர வாய்ப்பில்லை என்பது கொண்டாடிகள் அறிந்ததுதான். ஆனாலும் இந்தத் தொடரின் வீணாய்ப் போன இயக்குநர் எப்படி நகர்த்தப் போகிறார் என்ற கேள்வி கொண்டாடிகளை காலையில் இருந்தே இணையத் தேடலில் உலாவ விட்டுள்ளது.

ஹேமாவின் இந்தக் கேள்விக்கு கண்டிப்பாக சவுந்தர்யா தான் காரணம் என நினைக்கிறாராம் கண்ணம்மா. ஹேமாவிடம் என்ன பதில் சொல்வது என்றே கண்ணம்மாவுக்கு தெரியவில்லை. இப்படி இருக்கையில் உடனே சவுந்தர்யாவை பேசியில் அழைத்து நேரில் வர சொல்கிறார்.

நேரில் வந்த சவுந்தர்யாவிடம், ஹேமா பேசியது பற்றி சொல்கிறார். அவர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான். ஆனால் ஹேமா இதை செய்வாள் என அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கண்ணம்மாவுக்கு தான் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. அம்மா, அப்பா பற்றிய உண்மை தெரியாமல் 2 குழந்தைகளும் சிரமப்படுவதை நினைத்து கண்ணீர் விடுகிறார். இப்படி இருக்கையில் இன்று பாரதி வீட்டுக்கு செல்கிறார் லட்சுமி.

அப்பாவுடன் இருக்க ஆசைப்படும் இலட்சுமி, இன்று ஹேமாவுடன் சவுந்தர்யாவுக்கு விட்டுக்கு செல்கிறார். இலட்சுமியின் இந்த மாற்றம் கண்ணம்மாவுக்கு ஐயத்தைத் தூண்டுகிறது. இதுப்பற்றி யோசிக்கிறார். ஒருவேளை இலட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டதோ என யோசிக்கிறார். இதைப்பற்றி கீழ் வீட்டில் இருக்கும் வாய்தா வடிவுக்கரசியிடமும் சொல்கிறார். இதனுடன் இன்றைய அத்தியாயம் முடிகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,199.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.