Show all

சம்பளத்தை உயர்த்திக் கேட்கிறாராம் ஆராத்து ஆனந்தி! ஆம் சாய் பல்லவிதான்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது அவர் மலையாளத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் அறிமுகமான படம் 'கரு'. அதையடுத்து தற்போது 'மாரி 2'வில் தனுசுக்கு கதைத்தலைவியாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் 'ஆராத்து ஆனந்தி' என்ற தானி ஓட்டுநராக நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இதே நாளில் சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள 'படி படி லெச்சு மனசு' என்ற படமும் வெளியாகிறது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சர்வானந்த் கதைத்தலைவராக நடித்துள்ளார். 

இந்நிலையில்தான் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. மாரி-2 படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சூர்யாவின் என்ஜிகே வெளியாக இருக்கிறது. இந்தப் படங்கள் எல்லாம் வெற்றியடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சாய்பல்லவியை தற்போது தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறாராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.