Show all

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பாதிக்கப்பட்ட போது, தர்சன் முதலுதவி செய்யக்கூட வராமல் இருந்தது அதிர்ச்சியளித்தது! சனம் செட்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா சக போட்டியாளர்கள் கொடுத்த மனஉளைச்சலால் தற்கொலைக்கு முயன்றார். அதுசமயம் தர்சன் முதலுதவி செய்யக்கூட வராமல் இருந்த அந்த மனதத்தன்மை அற்றசெயல் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்தாராம் தர்சனின் காதலி சனம் செட்டி.

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா சக போட்டியாளர்கள் கொடுத்த மனஉளைச்சலால் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் வீட்டின் விதியை மீறியதாக கூறி நிகழ்ச்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். தனது தற்கொலை முயற்சிக்கு, செரின், கவின், லாஸ்லியா, சாண்டி, தர்சன், வனிதா, உள்ளிட்டோர்தான் காரணம் என்று, மதுமிதா தனது பேட்டியில் பல முறை தெரிவித்திருக்கிறார். தனது கீச்சுப் பக்கத்திலும் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்நிலையில் மதுமிதா, தான் அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, கவின் உட்பட யாரும் தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என தெரிவித்திருகிறார். பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிரச்சனை கொடுத்த சக போட்டியாளர்களைக் கடுமையாக சாடினார். 

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியே வந்த பிறகு, தர்சனின் காதலி, சனம் செட்டி தன்னை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறினார். அப்போது கையில் இப்படி காயப்படுத்திக் கொண்டபோது தர்சன் முதலுதவி செய்யக்கூட வராதததை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் சனம் செட்டி. 

தர்சன் முதலுதவி செய்யக்கூட வராமல் இருந்த மனிதத்தன்மை அற்றசெயல், தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினாராம் சனம் செட்டி. தர்சன் வெளியே வந்த பிறகு உங்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை என்றும் கூறினாராம் சனம் செட்டி. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,329.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.