Show all

வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு

வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளைக் கண்டறிந்து உள்ளனர்.

இதுகுறித்து,

வேற்றுகிரக வாசிகளை இன்னும் 25 ஆண்டுகளில் நாம் நேரில் சந்திக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ரோடு- மேப் அமைந்துள்ளனர். அதன் வழியாக சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய  புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி )  பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில்  100 மீட்டர் (328 அடி)   பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும்  நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு  ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவைச் சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்தத் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார்.

இந்தத் திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தைகச்  சேர்ந்த  வானவியலாளர், காஸ் மோலாகிஸ்ட் பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார். இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நிகல் வாட்சன் கூறும் போது வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகளின் நீண்ட கால முயற்சிக்குத் தற்போது பலன்கிடைத்து உள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில்  நியூசவுத் வேல்ஸ் பகுதியில் நிறுவபட்டு உள்ள பார்க்  ரேடியோ தொலைநோக்கிக்கு  ஒரு அன்னிய இரட்டை சமிக்ஞை கிடைத்து உள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவேற்று கிரகவாசிகளிடம் இருந்து வந்துள்ள சமிக்ஞை தான் என நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பார்க்ஸ் ரேடியோ தொலைநோக்கிக்கு வந்துள்ள தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 11 அடையாளம் தெரியாத நிலையற்ற ரேடியோ தரவுகள் பதிவு செய்யபட்டு உள்ளன. மெல்போர்ன் சுவின்பர்ன் பல்கலைக்கழக எமிலி பெட்ரோப் குழுவினர் இந்த சமிக்ஞையை கண்டறிந்து உள்ளனர்.இந்த சமிக்ஞையை பதிவு செய்த பின் இது வேற்று கிரகவாசிகளிடம் இருந்து வந்த குறிப்பிடத்தக்க சமிக்ஞை என நம்புகின்றனர். என்ன நடக்கிறது என எதுவும் நமக்கு தெரியாது. ஆனால் எதோ ஒன்று   நடக்கிறது  என நமக்கு தெரிகிறது. என்று கூறியுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.