Show all

படக்குழுவினரின் அதிகாரப்பாட்டு வெளியீடு! பொன்னியின் செல்வன் முதல்பாக விளம்பரச் சுவரொட்டி

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல்பாக விளம்பரச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கான விளம்பரச் சுவரொட்டியைப் படக்குழுவினர் அதிகாரப்பாடாக வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என விளம்பரச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிசா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு ஒரே ஒரு விளம்பரச் சுவரொட்டி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதிகாரப்பாடாக எந்த ஒரு விளம்பரச் சுவரொட்டியும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்” முதல் பாகத்துக்கான விளம்பரச் சுவரொட்டியைப் படக்குழுவினர் அதிகாரப்பாடாக வெளியிட்டுள்ளனர். அதில் அடுத்த ஆண்டு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்புற காட்சிகளை படமாக்கிய நிலையில் தற்போது வெளிப்புற படப்பிடிப்பில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.