Show all

தமிழக விடுதியில் அழுது புலம்பிய கேரள நடிகை! படக்குழுவினர், கலைஞர்களை இப்படி அலைகழித்திருப்பது வருத்தத்திற்கு உரியது.

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தங்கும் விடுதி ஒன்றில் நள்ளிரவு மலையாள திரைப்பட நடிகைக்கும் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது. 

நாகர்கோவில் பகுதியில் கடந்த சில கிழமைகளாக மலையாளப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர், உதவியாளர்கள் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் அன்றாடம் காலையில் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டு இரவில் விடுதிக்குத் திரும்புவார்கள். வழக்கம்போல நேற்று இரவு படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விடுதிக்;குத் திரும்பினார்கள். மலையாள நடிகை மஞ்சு சவேர்கர் தனது அறைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு படுக்கை விரிப்பு மாற்றப்படாமலே கிடந்துள்ளது. இதையடுத்து விடுதி ஊழியர்களிடம் நடிகை மஞ்சு சவேர்கர் சண்டை பிடித்துள்ளார். விடுதிக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி 60,000 ரூபாயை தாருங்கள் என விடுதி ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நடிகை விடுதியிலிருந்து கிளம்புவதாக கூறி உடைமைகளுடன் அங்கிருந்து புறப்பட முயன்றார். விடுதி ஊழியர்கள் உங்கள் படக்குழுவினரிடம் இருந்து வாடகை பாக்கியை வாங்கிக் கொடுத்துவிட்டு இங்கிருந்து கிளம்புங்கள் எனக் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஒரு கட்டத்தில்  அழுது புலம்பத் தொடங்கினார்.

இதுகுறித்து விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் படக்குழுவினர் விடுதி வாடகை பாக்கியைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

பெரிய குழுவை நிருவகிக்கும் படக்குழுவினர், வாடகை பாக்கி வைத்து, கலைஞர்களை அலைகழித்திருப்பது வருத்தத்திற்கு உரியது. 

அதுவும், தமிழகத்தில் ஒரு விடுதி உரிமையாளர், ஊழியர்களை வைத்து இந்த அளவிற்கு கலைஞர்களைக் கேவலப் படுத்தியிருப்பது தமிழகத்திற்கே அவமானம் 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.