Show all

நடிப்புக்கு முழுக்குப் போட உள்ளாராம் நடிகை காஜல்அகர்வால்!

படங்களில் வேலையாக இருக்கும் போதே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் உறுதிப்படுத்திய திருமணத்தில் கவுதம் கிச்சலு என்பவரை தலைவராக்கிக் கொண்ட காஜல் அகர்வால், தற்போது ஆண்குழந்தையை ஈன்றெடுத்த நிலையில், நடிப்புக்கு முழுக்குப் போட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பேரறிமுகக் கதைத்தலைவியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் காஜல்அகர்வால். அந்தப் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை

இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல் அகர்வால், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்து வசூலில் சாதனை படைத்தது.

மகதீரா பட வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் பெற்ற காஜல் அகர்வால், விஜய்க்குக் கதைத்தலைவியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். காவல்துறை அதிகாரி, விளையாட்டு வீராங்கனையாக இவர் நடித்து கொண்டாடிகளிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கொண்டாடிகள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

படங்களில் வேலையாக இருக்கும் போதே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் உறுதிப்படுத்திய திருமணத்தில் கவுதம் கிச்சலு என்பவரை தலைவராக்கிக் கொண்டார். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் கிச்லு இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தனர். தனது குழந்தையின் புகைப்படத்தை அன்னையர் நாளன்று வெளியிட்டு, அன்னையாக இருப்பதில் பெருமை அடைவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், காஜல் அகர்வால், திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், குழந்தையை கவனிக்க நேரம் தேவைப்படுவதாகவும், குழந்தை தன் அரவணைப்பில் வளர்க்கவே விரும்புவதாகவும் இதனால், ஓராண்டு கழித்து நடிப்பது குறித்து யோசிப்பதாக காஜல் அகர்வால், படத்தில் நடிக்க ஒப்பந்தம் பேசப் போன திரைத்துறையினருக்குத் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,285.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.