Show all

ஒரு வழியாக கண்டு பிடித்தாயிற்று! கமல் தொகுத்து வழங்கிய அந்த பிக் பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும்  பிரபலமடைந்தது . இந்த நிகைழ்ச்சியில் பங்குபெற்ற அத்தனை பிரபலங்களும் பிக் பாஸ் என்ற ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர்.  

கர கரவென  கம்பீரமான அந்த குரலுக்குச் சொந்தக்காரர் பின்னனி குரல் கலைஞர் கோபி நாயர் தான் என செய்திகள் வந்தது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் குரலுக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிரபல நடிகரும், தொகுப்பாளருமான ரிஷி தானாம் அது.  பிக் பாஸில் பங்கேற்ற அத்தனை பிரபலங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்துள்ளார். 

இவர் சன் தொலைக்காட்சியில் டீலா நோ டீலா, கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி, போன்ற பொது அறிவு விளையாட்டை தொகுத்து வழங்கி புகழ்பெற்றார். ரிஷி தொகுத்து வழங்கிய,  டீலா நோ டீலா நிகழ்ச்சியை  எண்டோமால் நிறுவனம்  தயாரித்து வெற்றி கண்டது.   ஆதலால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த அந்நிறுவனம் ரிஷியை  பிக் பாசின் குரலுக்கு சொந்தக்காரராக மாற்றியது.

பிக் பாஸின் அந்த கம்பீர குரலுக்காக ரிஷியின் குரலை தொழில்நுட்பம் கொண்டு சில மாறுதல்களை செய்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,069.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.