Show all

பேரறிமுக நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேரறிமுக நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார். 

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிமுக நடன இயக்குனர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்.

தமிழத் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், 'மகாதீரா' படத்திற்காக ஒன்றிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன இயக்குனர் சிவசங்கர் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,081.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.