Show all

தன்னுடைய வீட்டில் நாய் குரைத்தால் கூட பிக்பாஸ் வீட்டு ஞாபகம் வருவதாக பாலாஜி நினைவு கூர்கிறார்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி, ஐசுவர்யா, ஆகிய 4 போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன்படி நடிகை ரித்விகா 60 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று கடந்த இரண்டு நாட்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் ஐசுவர்யாவும், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் விஜயலட்சுமி, ஜனனி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி ஐசுவர்யாவின் நெருங்கிய நண்பரான யாசிகா பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன், பாலாஜியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தனிமையை உணர்ந்த ஐசுவர்யா, யாஷிகாவின் வருகையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார்.

இதை விளம்பரக் காணொளியாக நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், யாசிகா, பாலாஜி ஆகிய இருவரும் சக போட்டியாளர்களிடம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. யாசிகா பேசுகையில், வீட்டிற்கு சென்ற பின்னரும் ஒலிவாங்கியைத் தேடுவது போன்ற பிரமை ஏற்படுவதாக கூறுகிறார். அதே போல் பாலாஜி பேசுகையில், தன்னுடைய வீட்டில் நாய் குரைத்தால் கூட பிக்பாஸ் ஞாபகம் வருவதாக கூறுகிறார். யாசிகாவை பார்த்த மகிழ்ச்சியில் ஐசுவர்யா இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி இவர்கள் இருவரை சுற்றியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.