Show all

11மாத குழந்தை உயிரிழந்த நெஞ்சைப் பிழியும் சோகம்! நடுவானில் மூச்சு திணறலால் விமானத்தில்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. கத்தார் நாட்டைச் சேர்ந்த அந்த விமானத்தில் அர்னவ் வர்மா என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்தார். விமானம் தரையிறங்க சற்று நேரம் இருந்த நிலையில் அர்னவ் வர்மாவின் 11 மாத ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக பெற்றோரும், விமான பணியாளர்களும் முதலுதவி செய்ய முற்பட்டனர். உடனடியாக ஐதராபாத் விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பாக அங்கிருந்த உட்பகுதி மருத்துவமனை விரைவு படுத்தப்பட்டது. அவசரமருத்துவ வண்டி உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானம் உடனடியாக தரையிறங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி விமானம் தரையிறக்கப்பட்டு குழந்தை வேகமாக விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். குழந்தையை காப்பாற்ற ஏற்பாடுகள் செய்து காப்பாற்ற முடியாததால் விமான நிலைய ஊழியர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.