Show all

இரஜினி சுட்டிய அதிசயம்! எடப்பாடி- தான் தமிழக முதல்வர் ஆவோம் என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருந்திருப்பாரா?

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஆனது நேற்று நடந்த அதிசயம். தொடர்ந்தும் அவர் முதல்வராக இருப்பது இன்றும் நடந்து கொண்டிருக்கும் அதிசயம் என்று தெரிவித்த இரஜினி, நாளையும் அதிசயம் நடக்கும் என்று கமல் விழாவில் பேசினார். நளையும் அதிசயம் நடக்கும் என்று இரஜினி தெரிவித்ததை, தான் அரசியலுக்கு வருவதும் தமிழக முதல்வர் ஆவதும் நாளைய அதிசயம் என்று தெரிவிக்கிறார் இரஜினி என்று- இரஜினி ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றார்கள். 

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் கமல்ஹாசனின்  அறுபது ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள், ஆனால் அதிசயம் நடந்துள்ளது, ஆட்சி தொடர்கிறது என்றும் (இது எப்படி சாத்தியமானது? இது உலகின் எத்தனையாவது அதிசயம்? என்று உலகமே வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ‘எடப்பாடி தமிழக முதல்வர்’ குறித்த தகவலை) இரஜினிகாந்த் குறிப்பிட்டார். 

அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்து, அனைத்துத் தரப்பினரின் கைத்தட்டலைப் பெற்றிருக்கிறார். 

ஒரே படத்தில் பத்து கதாபாத்திரங்களில் நடிப்பது, அறுபது ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இருப்பது கமலஹாசனால் மட்டுமே முடியும் என்றும் ரஜினி புகழாரம் சூட்டினார். நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பின்னணி பாடகராக ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது இந்த உலகில்  கமல்ஹாசன் மட்டுமே என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். குழந்தையாக கமல் நடித்தபோதே அவர் படத்தை பார்த்து வியந்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். கமல்ஹாசன் ஒரு அறிஞர் பெருந்தகை என்றும், அவர் தனக்குத் தெரிந்ததை எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறார் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது என்றும்,  வேறு துறைக்கு சென்றாலும், சிந்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு மாறாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,340.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.