Show all

சூர்யாவிற்கும் பாடினார் ஒரு பாடல்! தொடர்ந்து திரையில் கலக்கி வரும் செந்தில் கணேஷ்

16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் இசைப்பாடகரான செந்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த பாடகர் பருவம் 6 போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். அதன்பிறகு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வருகின்றன.

செந்தில் அவர்களுக்கு ஏஆர்.ரகுமானின் இசையில் பாடும் வாய்ப்பு உறுதியான நிலையில், போட்டி முடிந்த உடனே இமானிடமிருந்து அறிவிப்பு வந்தது. டி.இமானின் இசையில் சிவகார்த்திக்கேயனுக்காக முதல்பாடலை பாடினார்.

பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முதல் காதல்காட்சிப் பாடலை பிரபுதேவா நடிக்கும் சார்ளி சாப்ளின் திரைப்படத்தில் பாடினர்.

இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படத்தில் சூர்யாவின் நுழைவாயில் பாடலை ஹரிஸ் ஜெயராஜின் இசையில் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மான் இரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கொளுத்துங்கள் செந்தில்! இசைத் தமிழ் வெல்லட்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.