Show all

மதிவண்டியில் 400 கி.மீ. பயணித்த ஆர்யா! கீச்சுவில் கொண்டாடிகளின் மகிழ்ச்சிப் பதிவுகள்

400 கி.மீ. தூரம் மிதிவண்டி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக கீச்சுவில் தெரிவித்துள்ளார் ஆர்யா. தான் மதிவண்டியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா, மிதிவண்டியில் 400 கி.மீ. பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் பட உலகின் முன்னணி கதைத்தலைவனான ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அத்துடன் மிதிவண்டி பந்தய வீரராகவும் இருக்கிறார். இந்தியா மற்றும் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். 

கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி மிதிவண்டியில் உலா வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை மிதிவண்டி பயணம் செய்ததாக கூறி இருந்தார். 

இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் மிதிவண்டி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக கீச்சுவில் தெரிவித்துள்ளார். மதிவண்டியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். அவரின் கொண்டாடிகள் வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யாவின் மிதிவண்டி பயண சாதனையை நடிகர் விவேக்கும் கீச்சுவில் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆர்யா, உங்களின் 400 கி.மீ. மிதிவண்டி பயணத்துக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நலப்பாட்டில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். விவேக் பாராட்டுக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.