13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகில் பெரும்பாலும், ஒரே நாளில் பெரிய கதைத் தலைவர்களின் படங்களின் வெளியீட்டு நாள் அறிவிக்கப்பட்டால், அவரவர் தங்களது படங்களில் வெளியீட்டு நாளை தள்ளி வைப்பது உண்டு. இது காலம் காலமாக தமிழ் திரைப்படத்தில் நடந்து வருகிறது. இதுவே, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய கதைத்தலைவர்ளின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது, வரும் கதைத்தலைவர்களின் படங்கள் ஒரே நாளில் ஒரேயொரு படம் மட்டுமே வெளியாகி வருகிறது. ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் படம் கடந்த வெள்ளியன்று வெளியாகயிருந்தது. ஆனால், அன்று விஜய் சேதுபதியின் ஜுங்கா, த்ரிஷாவின் மோகினி ஆகிய படங்கள் வெளியானதால், கஜினிகாந்த் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அன்றைய நாளில் அதாவது வரும் வெள்ளிக் கிழமையன்று தமிழ் திரைப்படத்தில் கிட்டத்தட்ட 12 படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த படங்களின் பட்டியல்: 1. கஜினிகாந்த் 2. மணியார் குடும்பம் 3. நாடோடிக் கனவு 4. கடிகாரமனிதர்கள் 5. உப்பு புளி காரம் 6. காட்டுப் பயசார் இந்தக்காளி 7. எங்க காட்ல மழை 8. ஓ காதலனே 9. அழகுமகன் 10. கடல் குதிரைகள் 11. போய்யா 12. அரளி போன தலைமுறையைச் சார்ந்தவர்கள் எங்க காலத்தில் எல்லாம் இப்படி இத்தனை படம் வர கொடுத்து வைக்கலையேப்பா என்று வியக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,863.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.