Show all

தனுஷுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படம் மூலம் இயக்குனரானவர் வேல்ராஜ் . அப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தனுஷுடன் வேல்ராஜ் மீண்டும் இணைந்தார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நாயகிகளாக எமி ஜாக்சனும், சம்தாவும் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்யும் வேல்ராஜ், இப்படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக அவருடிய உதவியாளர் ஒருவர் படப்பிடிப்பில் இருந்தார்.

இதையடுத்து தனுஷுக்கும், வேல்ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு எபட்டதாகவும், அதனால் இந்த படத்தில் இருந்து வேல்ராஜ் விலகிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறேன். இப்படத்தின் புரோமோஷனுக்காகவும் சில காட்சிகளை படமாக்க இருந்ததாலும் தனுஷ் படத்தில் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் என்னுடைய உதவியாளரை வைத்து தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினேன். நான் கலந்துக் கொள்ளாததால் படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளது. அது முற்றிலும் வதந்தி." என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.