Show all

ஹாலிவுட் கலைஞர்களைத் தமிழகத்திரைக்கு கொண்டுவந்த படம் ‘2.0’: ஏமி புகழாரம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரின் திறனையும் ஒருங்கிணைத்து, தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் சங்கர் என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’ இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக துபாயில் படக்குழு இன்று இதழியலாளர்களைச் சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்சய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் சங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.

இதழியலாளர் கள் மத்தியில் ஏமி பேசியதாவது:

2.0’ படத்துக்காகப் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக ஹாலிவுட் தரத்துக்கு இணையாக படத்தை எடுத்துள்ள லைகா நிறுவனத்துக்கு நன்றிகள்.

ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரின் திறனையும் ஒருங்கிணைத்து, தமிழகத்திற்குக் கொண்டுவந்த சங்கருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் திறமை மிக்க கலைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். படம் மிகுந்த பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பாராட்டிப் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.