28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலைக்கான படிப்புகள் தருகிறோம் என்று கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என ஏராளமாக உள்ளன. அந்தப் படிப்பிற்குள் நுழைவதற்கு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்கு ஏராளமான நிறுவனங்கள். அந்த படிப்புகளோடு தொடர்பு படுத்தி ஏராளமான விளம்பர நிறுவனங்கள். இவைகள் எல்லாம் தனியாக ஒரு பக்கம் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப் பட்டு வருகின்றன. ஆனால் வேலை தருவதற்கான நிறுவனங்களோ விரல் விட்டு எண்ணும் அளவில், அதுவும் அன்னிய கார்ப்பரேட்டுகளால் நடத்த மட்டும் அனுமதிக்கப் பட்டு வருகின்றன. இந்தியத் தொழில் நிறுவனங்களோ ஏகப்பட்ட நிருவாக நடவடிக்கைகளைத் தாண்டியும், மூலதனத்திற்கு வங்கிகளில் தவங்கிடந்தும் கடைசியில் குறுநிறுவனங்களாக முடங்கிப் போய் விடுகின்றன. இந்தியத் தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான வேலையாட்களைத் தயார் படுத்திக் கொள்ள அவர்களுக்கே வேலைக்கான படிப்புகள் தர கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் நிறுவ அனுமதி அளிக்கும் போதுதான் இந்தியாவில் தொழிலும், வேலைவாய்ப்பும் பெருகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089