Show all

தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழாவில் கொண்டாடப்படும் நிகழ்வுகள்

தமிழர் திருநாளான பொங்கல் போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொதுவாக கொண்டாடப்படும்.

போகி அல்லது காப்புக்கட்டு
போகி என்பது பொதுவாக பழையன கழித்தல் மற்றும் புதியன புகுதல் என்பதன் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த புதிய பொருள்கள் அனைத்தையும் எடுத்து வருவதன் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள் மற்றும் வீடுகளில் உள்ள பொருள்களை எல்லாம் சுத்தம் செய்து, வாசல்களில் மாட்டுசாணமிட்டு மேலும் வீடுகளை பூலாப்பூ மற்றும் ஆவாரம் பூக்களை கொண்டு அலங்காரம் செய்வது இந்நாளின் வழக்கம். போகி அல்லது காப்புக்கட்டு மார்கழி மாதம் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல்
தை மாதம் முதல் தேதியன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் தான் முக்கிய விழாவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவதால் இது சூரியப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

மாட்டுப்பொங்கல்
விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாடுகள் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அழகுபடுத்தி, பொங்கல் செய்து அவற்றிற்கு படைத்து வணங்குவது வழக்கம். ஒரு சிலர் இந்நாளில் முன்னோர்களையும் வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

காணும் பொங்கல்
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். மேலும் ஜல்லிக்கட்டு, கபடி, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற வீர விளையாட்டுக்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என ஏராளமான விளையாட்டுப்போட்டிகள் இந்நாளில் நடத்துவது தான் வழக்கம். ஆனால் தற்போதைய காலங்களில் அனைத்து நாட்களிலும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.