Show all

மந்திரர் சிறப்புச் சான்றிதழ் பெற விருப்பமா?

அன்பின் இனிய தமிழ்உறவுகளே! தமிழன் அப்படி இருந்தான், தமிழன் இப்படி இருந்தான், தமிழனுக்கு இதுவும் தெரிந்திருந்தது, தமிழனுக்கு அதுவும் தெரிந்திருந்தது, தமிழன் இயல்அறிவு (சயின்ஸ்) முன்னோடி, என்றெல்லாம் நிறைய நிறைய எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். 

சரி! தமிழ்முன்னோர் அறிந்திருந்த ஏதாவதொரு கலையைத் தற்போது எனக்குக் கற்றுத்தர முடியுமா? என்று கேட்டால் விடையளிக்க முன்வந்தவர் ஒருவரும் இல்லை. 

இப்படியாக தமிழர் பழம்பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? தமிழர் பழம்பெருமையில் திளைக்க என்னதான் வழி? என்ற கேள்விக்கு விடையளிக்க, தங்கள் தேடலில் ஒன்றல்ல இரண்டு கலைகள் கிடைத்து விட்டது என்று கையை உயர்த்தியுள்ளது மந்திரம் கோயில் 

மந்திரம் கோயில் என்கிற இந்தக் கல்வி நிறுவனம், தற்போதைக்கு அந்தக் கலைகளைக் கற்றுத்தர இரண்டு கலைகளுக்கும் இரண்டு சான்றிதழ் படிப்புகளை அறிவித்துள்ளது. 1.கணியக்கலை சான்றிதழ் படிப்பு. 2.மந்திரர் சிறப்புச் சான்றிதழ் படிப்பு என்பனவாகும்.

அவற்றுள் மந்திரம்கலை தமிழ்முன்னோரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கலை என்று தெரிவிக்கிறது மந்திரம் கோயில். மந்திரம் கலையால், கற்றுக்கொண்டவர்களை பேரளவான முன்னெற்றத்திற்கு எடுத்துச்செல்ல முடியும் என்று பெருமை கொண்டாடுகிறது மந்திரம் கோயில். மந்திரர் சிறப்புச் சான்றிதழ் படிப்புக்கு 'சிறப்பான முன்னேற்றமே எனது தேடல்' என்று தேடுவதை மட்டும் தகுதியாக அறிவிக்கிறது மந்திரம் கோயில்.

இந்தக் கலைக்கு தற்போதைக்கு மந்திரர் சிறப்புச் சான்றிதழ் படிப்பு மட்டுமே வழங்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மந்திரம் இளவல் என்கிற இளநிலை பட்டப்படிப்பு, மந்திரம் முதுவர் என்கிற முதுநிலை பட்டப்படிப்பு, மந்திரம் முனைவர் என்கிற முனைவர் பட்டப்படிப்பு ஆகியன வழங்க முடியும் என்று உறுதிதெரிவிக்கிறது மந்திரம் கோயில்.

மந்திரர் சிறப்புச் சான்றிதழ் படிப்புக்கு, கீழ்கண்ட இணைப்பில் சென்று, விரிவான விவரம் அறிந்துகொண்டு, விண்ணப்பிக்கலாம். இணைப்பு: மூன்றாம் மந்திரர் சிறப்புச் சான்றிதழ் பெற விருப்பமா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.