Show all

தமிழ்நாடு மட்டுமே இந்தியாவாக இருக்கிறது

ஒட்டு மொத்த இந்தியா- தமிழர்களுக்கு மட்டுமான தாய்மண்ணாக இருந்தது. அயலவர்கள் வரவால்- இந்திய ஆட்சிமொழிகளாகப் பட்டியல் இடப்பட்டிருக்கிற அட்டவணை எட்டு தெரிவிக்கிற தமிழ்தவிர்த்த 21 மொழியினங்கள் இந்தியாவில் புத்தினங்களாகத் தோன்றின. ஒட்டுமொத்த ஒன்றியத் தலைமையின் கீழ், 22 மொழியினங்களும் தனிக்குடித்தனம் பேண மொழியடிப்படை மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாடு பெத்த மனம் பித்து நிலையில் இயங்க, மற்ற மற்ற மாநிலங்கள் பிள்ளை மனம் கல்லாக தமிழுக்கு எதிராகப் பகைமை பாராட்டி வருகின்றன.

13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125: 

ஒட்டு மொத்த இந்தியா தமிழர்களுக்கு மட்டுமான தாய்மண்ணாக இருந்தது. 

தமிழ்த்தொடராண்டு 1500ல் இந்தியாவில் நுழைந்தது ஆரிய இனம்.

ஆரிய இனத்தின் பாகுபாட்டியல் தொன்மங்கள் மற்றும் காமசாஸ்த்திரப் பாலியலை மலைத்தவர்கள், ஆரியப் பாகுபாட்டியல் தொன்மங்கள் மற்றும் காமசாஸ்த்திரப் பாலியலைக் கொண்டாடி, தங்களை ஆரியராக காட்ட முனைந்து, குஜராத்தியர், வாங்காளியர், தெலுங்கர் கன்னடர் மிக அண்மையில் மலையாளி என்று புதுப்புது இனங்களாகிப் போனார்கள்.

பல அயல் இனங்களும் இந்தியாவில் நுழைந்தன. இந்தியா- ஐரோப்பிய இனத்திற்கு, அடிமையும் ஆனது. விடுதலை பெற்றபோது பல்வேறு மொழியினங்களும் தங்களை தனித்துவப்படுத்துவதில் ஆர்வம் காட்டின.

அதனால் இந்தியா பல்வேறு மொழிஅடிப்படை மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்தியா மொழிஅடிப்படை மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு புத்தினத்தவர் அனைவரும் அவரவர் மொழியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்

வங்காள மக்கள் மதஅடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைந்தபோதும்- இல்லையில்லை நாங்கள் மொழி அடிப்படையானவர்கள் என்று முழங்கி தனிநாடாகிவிட்டார்கள்.

தமிழினத்தவர் மட்டும் இன்னும் இந்தியாராகவே இருக்கிறார்கள். தங்கள் மொழியைக் (தமிழைக்) கொண்டாடுவதை இனவாதம் என்று தமிழர்கள் மட்டுமே பேசி வருகிறார்கள்.

கல்வித்துறையில் முதலாவது பாடப்பிரிவை தமிழ் என்று தலைப்பிடாமல் மொழி என்றும், இரண்டாவது பாடப்பிரிவை அயல்மொழி என்று தலைப்பிடப்படாமல் ஆங்கிலம் என்றும் தலைப்பிட்டு தமிழ்நாட்டின் முதன்மைக் கல்விமொழி இந்தியாவின் அனைத்து மொழிகளும் என்பதாக தமிழ்நாட்டுக் கல்வித்திட்டம் பேணி வருகிறது.

தமிழ்நாட்டில், தமிழ் என்கிற தலைப்பு பாகுபாடகப் பார்க்கப்படுகிறது. அதனால் திராவிடம், அகில இந்திய திராவிடம், தென்னிந்திய நடிகர்கள், என்று இந்திய ஒருமைப்பாட்டையே தமிழ்நாட்டில் தூக்கிப்பிடிக்கிறோம். தமிழ்நாடு மட்டுமே இந்தியாவாகத் தொடர்கிறது.

இந்திய ஆட்சியில் அமர்கிற யாரும் தங்கள் தங்கள் மொழியினத்தைக் கொண்டாடுகிறார்களே அன்றி இந்தியாவைக் கொண்டாடுவது இல்லை.

ஆனால் தமிழர்கள்- தமிழ்நாடு என்று தமிழுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்திலும்- தமிழ் என்கிற தலைப்பு இனவாதம் என்ற தீண்டாமையை முன்னெடுக்கிறோம்.

தமிழர்களால் தங்கள் இந்தியப் பொதுமையை மாற்றிக் கொள்ள முடியாது என்றால் அவர்கள் ஒன்றிய ஆட்சிக்கு முனைவதே சரி. தமிழர்களில் யாருக்கெல்லாம் தனிக்குடித்தனத்தை பேணும் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே தமிழ்நாட்டு ஆட்சிக்கு முனையட்டும். 

பிற மாநிலத்தவர்களால் தங்கள் மாநில உணர்வைத்தாண்டி, இந்தியப் பொதுமை பேண முடியாது என்றால் அவைகள் தங்களை மாநிலத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ், பாஜக போன்ற ஹிந்தி என்கிற தங்கள் மாநிலமொழிவெறியர்கள் ஒன்றிய ஆட்சிக்கு முனையக்கூடாது.

அட்டவணை எட்டைத் தூக்கிப் பிடிக்க அணியமாக இருக்கிற தமிழர்களே இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்று இந்தியாவின் அனைத்துத் தனிக்குடித்தனக்காரர்களும் உணரவேண்டும். அப்போது இந்தியா உலக அரங்கில் தனித்துவமாக உயர்த்தப்படும். 

இருப்புத்-தங்கத்திற்கு மிகையாக பணத்தை அச்சடித்து கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்றும் நிலையால்தாம், இந்தியா ஒரு அமெரிக்க டாலருக்கு 83 இந்திய ரூபாய்களை அழவேண்டிய உள்ளது. 

கார்ப்பரேட்டுகளைப் பேணாத சிறுமுதலாளிகளைப் பேணும்  தமிழினத்தின் இந்திய ஆட்சியால் மட்டுமே இந்தியச் செலாவணியை அமெரிக்க தரத்திற்கு உயர்த்த முடியும். 

இந்தியாவின் பொருளாதாரத்தை, நடப்பிலும், பேரளவு காப்பற்றி வருவது, தமிழ்நாடே என்பது, வரலாற்றுத் தரவு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.