ஷாங்க்ரி லா 5 மின்மினி உணவகத்தில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக பணிபுரிபவர்கள். 09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் கொழும்பு நகரில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,130.
இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 மின்மினி உணவகங்களிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதன்பின் நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 காவலர்கள் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து இருந்தன.
இதனிடையே வேனில் இருந்த வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் காவலர்கள் இன்று ஈடுபட்டு இருந்தனர். அந்த முயற்சியில் வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு நகரில் மொத்தம் 9 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஷாங்க்ரி லா 5 மின்மினி உணவகத்தில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக பணிபுரிபவர்கள்.
கொழும்புவில் தற்கொலை தாக்குதல் நடத்திய சீலவனின் மனைவி மற்றும் சகோதரி வேறொரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானார்கள் என்று தெரிவிக்கப் படுகிறது. அவர்கள் உருகொடவட்டாவில் நேற்று கடைசியாக நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



