தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி, தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி, அந்த மருத்துவமனைக்காக 2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளான். 28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் ஏற்படுத்திய காயத்தால் டோனியின் இரண்டு கால்களையும் அகற்ற நேர்ந்தது. தற்போது தனது வளர்ப்பு பெற்றொருடன் வசித்து வரும் டோனி, இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கேப்டன் டாம் மூர், அண்மையில் கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்தார். தானும் அதே போல் நிதி திரட்டி, சிறு அகவையில் தன் உயிரைக் காப்பாற்றியப் லண்டன் எவெலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு டோனி வழங்க முடிவெடுத்தார். தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் திரட்டத் திட்டமிட்டார். ஆனால் வியப்பூட்டும் விதமாக டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை சேர்ந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.