திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருத்துப்பரப்புதல் செய்து கொண்டிருந்த போதே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததாகவும் சொல்லபடுகிறது. இந்த நிலையில், இன்று காலை 7.56 மணிக்கு மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அவர் வெற்றி தோல்வி அறிந்துகொள்ள இன்னும் 21 நாட்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த 25 தொகுதிகளில் ஒன்றான திருவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினரான மாதவராவ் களமிறங்கினர். வேட்புமனு பதிகை செய்த மறுநாளே மாதவராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் இரண்டு நாட்கள் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.