Show all

சப்பையான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ள ஆளுநர் ஏதாவது பரபரப்பைக் கிளப்புவாரா

சப்பையான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏதாவது பரபரப்பைக் கிளப்புவாரா?

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. செப். 19 அன்று சென்னை வந்த ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து விசாரித்த அறங்கூற்று மன்றமும்;; அடுத்த மாதத்திற்கு வழக்கை தள்ளி வைத்து அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தினகரன் அணியிடமிருந்து காரசாரமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

நடுவண் அரசுக்கு எதிரான மக்கள், மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களில் எதிலும் பெரிதாக முன்னேற்றம் இல்லை.

இந்த நிலையில், செப்டம்பர் 21ம் தேதி நாக்பூர் விரைந்த ஆளுநர், மீண்டும் இன்று மும்பை வழியாக சென்னை வந்துள்ளார்.

இதுபோன்ற சப்பையான சூழ்நிலைக்கு நடுவே ஆளுநர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ள ஆளுநர் ஏதாவது பரபரப்பைக் கிளப்புவாரா!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.