Show all

நான் என்ன கண்ணா செய்யறது! கட்சி தொடங்க இன்னும் நேரம் வரலையே என்கிறார் ரஜினிகாந்த்

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் குறித்தும், தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்து ரஜினி தனது உரையில் தங்களுக்கு நல்ல தீனி தருவார் என்று ஆர்வத்துடன் வந்த ஊடகத்தினரை ரஜினி ஏமாற்றிவிட்டதாக கருதப்படுகிறது. உரையின் கடைசியில் இன்னும் நேரம் வரவில்லை என்றும் நேரம் வரும்போது கண்டிப்பாக தலையாய அறிவிப்பை தருவேன் என்றும் கூறினார்.

மேலும் ரஜினி இந்த விழாவில் பேசியதாவது: இமயமலைக்கு நான் செல்வதே கங்கையை பார்க்கத்தான். கங்கை ஒருசில இடத்தில் ஆக்ரோஷமாகவும், ஒருசில இடத்தில் அமைதியாகவும் இருக்கும்

என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய ஆறுகளை இணைத்து விடுவதுதான். அதற்காக நான் முழு முயற்சியும் எடுப்பேன். அது என்னுடைய நீண்ட நாள் கனவும். அந்த கனவு முடிந்த பிறகு நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை.

வாழ்க்கையில் ஒருவன் நல்லவனாக இருக்கலாம் . ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்ககூடாது என்பதை லிங்கா படம் மூலம் கற்றுக்கொண்டேன்.

மேலும் 65அகiயுள்ள நான் மகள் அகவையுள்ள நடிகையுடன் இணை சேர்ந்து நடிக்க கூடாது என்பதையும் அந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்.

லிங்கா படம் கொஞ்சம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறினர். இதைத் தான் 40 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். என்னடா இந்த குதிரை ஓடிட்டே இருக்கே, 10 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு, 40 ஆண்டு பார்த்தாங்க இன்னும் நிக்காம ஓடுதேன்னு. நானா ஓடுறேன், ரசிகர்களாகிய நீங்கள் ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான்.

யார் என்ன சொன்னாலும் சரி என் பாதையிலே நான் போய்க்கிட்டே இருப்பேன். ஊடகங்கள் எதிர்பார்ப்பு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்யறது கண்ணா இன்னும் நேரம் வரலை. நேரம் வந்துவிட்டால் மக்கள் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் இவ்வாறு ரஜினி பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.