Show all

கீற்றுக் கொட்டகையில் இருந்து நிறைய மருத்துவர்களை உருவாக்கி தந்திருக்கிறது எமது பள்ளிகள்

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீற்றுக் கொட்டகையில் இருந்து நிறைய மருத்துவர்களை உருவாக்கி தந்திருக்கிறது எமது பள்ளிகள். 

பன்னிரண்டு ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் எந்த பட்ட வகுப்புக்கும் தகுதி ஆனவர்கள். கூடுதலாக ஏதாவது கற்பிக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த பன்னிரண்டு வகுப்புகளிலேயே பயிற்றுவிக்க வேண்டும். 

வெளியில் கற்று தனியாக ஒரு தேர்வு எழுதி பட்ட வகுப்புக்கு நுழைய வேண்டும் என்றால், அந்த பன்னிரண்டு ஆண்டுகள் படித்த படிப்புக்கு என்ன வேலை? 

அதை கொஞ்சம்- 1.வானத்தில் இருந்து குதித்துள்ள அறங்கூற்றுவர்களும், 2.வேற்று கிரகத்தில் தேநீர் கடை நடத்தி வந்தவர் ஏதோ நம்மை வாழ வைக்கலாம் என்று பூமிக்கு வந்துள்ள மோடி அவர்களும், 3.மனிதர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட தெய்வீக ஆற்றல் பொருந்திய இந்திரலோகத்திலிருந்து வருகை புரிந்துள்ள நடுவண் இடைநிலை வாரியமும், தமிழிசை, இராஜஷர்மா, பென்னர், சுப்பிரமணியசாமி, தொலைக் காட்சிகளில் பாஜக பெயரில் இடம் பெறுகிற வானரப் பட்டாளங்களும் விளக்க வேண்டும். 

எங்கள் தமிழ் உறவுகள் உதிரத்தில் உருவான கல்வி நிலையங்களுக்கு நாங்களே பிணக்கிலலாமல், மதிப்பெண் அடிப்படையில் இருக்கிற கல்விநிறுவனங்கைள பகிர்ந்து கொள்கிறோம் தயவு செய்து வயிற்றில் அடித்து பாவத்தைக் கட்டிக் கொள்ளாதீர்கள். நீட் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.