Show all

02,வைகாசியன்று (மே 16) வெளியாகின்றன! பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக் கல்வித்துறையில் சிலபல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. கடந்த கல்வி ஆண்டு வரை பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.

மாணவர்களை உற்சாகப் படுத்தும் முகமாக பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 02,வைகாசி அன்றும் (மே 16), பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 09,வைகாசி அன்றும் (மே 23) வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார். அதன்படி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தேர்வு முடிவு நாளேடுகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர். பதினைந்து  ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. பதிமூன்று  ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.

கடந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை பனிரெண்டு, பத்தாம் வகுப்பு ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்பேசி எண்களுக்கு குறுஞ்சேதி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வில் தரவரிசை அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.

இந்த ஆண்டு வருகிற 02,வைகாசி அன்று (மே 16), பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. பள்ளிகள் வழங்கி உள்ள இணையதள முகவரியில் (மின்அஞ்சல்) தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை பதிவேற்றம் செய்ய உள்ளது.

மேலும், தேர்வுத்துறை அளிக்கும் முகவரியில் தேர்வு முடிவுகளை வருகிற 02,வைகாசி அன்று (மே 16), அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

நமது தமிழக அரசு தேர்வுத் துறைக்கு மிகப் பெரிய வலையெழுங்கு உள்ளது. நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் தனக்கு நடுவண் அரசு அதிகாரம் வழங்கிய நீட்டை, நாயிடம் கிடைத்த புத்தாடையை நார்நாராக கிழித்தது போன்ற கதையாக கேவலப்பட்டதில்லை; பிசிறில்லாமல் வியக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,783.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.