Show all

குளறுபடிகளை தாங்கிக் கொள்ளாமலே இரண்டு உயிர்கள் பலி: நீட்! ஐயகோ தேர்வு முடிவு

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அங்கு போய் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு தெரிந்தவர் மூலம் மகனை தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.  நேற்று காலை முதலே கிருஷ்ணசாமி உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து கிருஷ்ணசாமியை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி மரணமடைந்தார்.

தந்தை மரணமடைந்த செய்தியை தேர்வு எழுதி முடிக்கும் வரை  மகனுக்கு தெரிவிக்கப்படவில்லை.

மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அவரது தந்தை கண்ணன் சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும்போது நெஞ்சுவலியால் மரணடமடைந்துள்ளார்.

இவரது உடல் இப்போது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் அடுத்ததடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கடந்த முறை நீட் தேர்வின் போது அரியலூரை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அது தேர்வில் தோல்வியடைந்ததற்காக நீட் கொண்ட உயிர்ப்பலி. 

இன்று தேர்வு முடிவுக்கு முன்னரே நீட் தேர்வு இரண்டு உயிர்களைக் காவு வாங்கி விட்டது. 

இன்னும் வரவிருக்கிற தேர்வு முடிவை நினைத்தால் நெஞ்சம் எல்லாம் பதைபதைக்கிறது. 

பனிரெண்டு ஆண்டுகள் படித்து எழுதிய தேர்வால் பரிசோதிக்க முடியாத திறமையையா தேர்வை முறையாக நடத்தக் கூட தகுதியில்லாத நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியத்தால் சோதித்து விட பட முடியப் போகிறது. பேசாமல் எந்தப் படிப்பும் படிக்காமல் சீட்டு குலுக்கல் போட்டு அதிர்ஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுத்து விட்டுப் போகலாமே. அது கூட கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.

இராணுவத்திற்கு ஆள் எடுப்பதில் கூட இவ்வளவு கெடுபிடிகள் இல்லை யென்றே மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,779.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.