23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கள்ள ரூபாய் தாளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கிறோம் என்று இந்திய மக்கள் அனைவரையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கழுவில் ஏற்றினார்கள். இப்போது அதுவேதான் நீட் தேர்விலும் நடக்கிறது. மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கிறோம் என்று அனைத்து மாணவர்களையும் கழுவில் ஏற்றுகிறார்கள். ஒன்றிரண்டு முகமதியர்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த முகமதிய இனத்தையே தீவரவாதிகளாகப் பார்ப்பார்கள். தூய்மை இந்தியா என்று பேசிக் கொண்டு ஊர் தூய்மையாக இல்லா விட்டால் ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் குடும்ப அடையாள அட்டைக்கு அரிசி இல்லை என்று மறுக்கப் பட்டது புதுச்சேரியில். மக்களிடமே ஓட்டு வாங்கி சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஆன பிறகு மக்களுக்கு தங்களை முதலாளிகளாக நினைத்துக் கொள்வார்கள். மக்களைக் கிள்ளுக்கீரையாக நடத்துவார்கள். இத்தனைக்கும் காரணம், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் போடப்படும் போன்ற பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்கியதால், எங்கே நெருங்கி பழகினால் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் பாஜகவினர் இப்படி நடந்து கொள்கிறார்கள். அதையும் தாண்டி வாக்குறுதிகளைக் கிளறி விட்டால், தேசத்துரோகியாக நம்மை அடையாளப் படுத்துவதற்கு தமிழிசை, ராஜஷர்மா, பொன்னர், சுப்பரமணியசாமி என்று ஒரு கூட்டத்தையே தயார் செய்து வைத்திருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,779.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.